புதன், 9 செப்டம்பர், 2015

உலக பொருளாதாரத்தின்

உலக பொருளாதார நிலைக் குறித்த உயர்மட்ட கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்

     புதுதில்லி, 07 செப்டம்பர், 2015

  
உலக பொருளாதாரத்தின் சமீபத்திய போக்கு மற்றும் இந்தியாவில் அதற்கான வாய்ப்புகள் குறித்து புதுதில்லியில் நாளை காலை நடைபெற இருக்கும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.

     இந்தக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர்கள், அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகள், தொழில் துறை பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோர் உட்பட 40க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.

     பொருளாதாரத்தில் அண்மையில் காணப்பட்ட மாறுதல்களால் ஏற்பட்ட தாக்கம் குறித்தும் இந்தியா அவற்றை சாதகமான முறையில் எவ்வாறு செயலாற்றுவது என்பது பற்றியும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக