புதன், 21 அக்டோபர், 2015

நம்முடைய மதிப்பு


200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு
 பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென
கையைத் தூக்கினர். பேச்சாளார் “உங்களில்
ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன்.
ஆனால், அதற்கு முன்”
எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக்
கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும்
விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர். அவர் அந்த
ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி
அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும்
இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?
என்றார். அனைவரும் இப்போதும் கைகளைத்
தூக்கினர். அவர் தொடர்ந்தார்
“கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை
கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன்
மதிப்பை இழக்கவில்லை. ஆனால்
மனிதர்களாகிய நாம் அவமானப் படும்
போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து
போய் நம்மை நாமே தாழ்த்திக்
கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு
என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள்
தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல்
வாழுங்கள்... எப்பொழுதும் சாந்தமாக இருங்கள்  அலுவலகத்தில் உள்ள  மன அழுத்தத்தை வீட்டிலோ நண்பர்களிடத்திலோ காட்டாதீர்கள் .நீங்கள் எந்த ஒரு உயர் பதவியில் இருந்தாலும் அது நிரந்தரம் என்று நினைக்காதீர்கள் .நண்பர்களை பகைக்காதீர்கள் ...பொறுமை இழந்து வார்த்தையை பயன் படுத்தாதீர்கள் வாழ்க வளமுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக