புதன், 21 அக்டோபர், 2015

ஜப்பானிய நீர் சிகிச்சை

தினமும் அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பல் துலக்குமுன் ஆறு குவளை (1.26 லிட்டர்) நீர் பருகுவதால், உடலின் உட்புற உறுப்புக்கள் தூய்மையாக்கப்பட்டு, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் மறைகின்றது. (இதை நம் முன்னோர்கள் 'உஷை பானம்'என்றழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)
தண்ணீரைக் குடித்தபிறகு, ஒரு மணி நேரத்திற்கு காபி, டீ போன்ற பானங்களையோ,பிஸ்கட், பழம் போன்ற தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக மிக அவசியமானது, முக்கியமானது. இதைக் கவனத்தில் கொண்டு நடைமுறைப் படுத்த வேண்டும்.
காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில், முதல் நாள் இரவுச் சாப்பாட்டை முடித்த பிறகு, படுக்கைக்குச் செல்லுமுன்பு, நரம்புமண்டலத்தைத் தூண்டக்கூடிய பானங்களையோ, பொருட்களையோ (மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள்) சாப்பிடக்கூடாது. இந்த நிபந்தனையும் முக்கியமானது. இரவே பல் துலக்கிக்கொள்வது நல்லது.
தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்குமானால், அதை முதல் நாள் இரவே கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி, பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.
இம்முறை ஆரம்பத்தில் ஒரு சில நாட்களுக்கு சற்று சிரமமாகத் தோன்றலாம். பின்னர் பழக்கமாகிவிடும்.
மருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர், பணச் செலவு ஆகிய எதுவுமே இல்லாமல், இம்முறைப்படி நீரைப் பருகுவதால், கீழ்க்கண்ட நோய்கள் குணமாகின்றன:-
* தலைவலி
* இரத்த அழுத்தம்
* சோகை
* கீல்வாதம்
* பொதுவான பக்கவாதம்
* ஊளைச்சதை
* மூட்டுவலி
* காதில் இரைச்சல்
* இருதயப் படபடப்பு
* மயக்கம்
* இருமல்
* ஆஸ்த்மா
* சளி
* காசநோய்
* மூளைக் காய்ச்சல்
* கல்லீரல் நோய்கள்
* சிறுநீரகக் கோளாறுகள்
* பித்தக் கோளாறுகள்
* வாயுக் கோளாறுகள்
* வயிற்றுப் பொருமல்
* இரத்தக் கடுப்பு
* மூலம்
* மலச்சிக்கல்
* உதிரப்போக்கு
* நீரழிவு
* கண் நோய்கள்
* கண் சிவப்பு
* ஒழுங்கில்லாத மாதவிடாய்
* வெள்ளை படுதல்
* கர்ப்பப்பை புற்றுநோய்
* மார்புப் புற்றுநோய்
* தொண்டை சம்பந்தமான நோய்கள்
இந்த முறை ஜப்பானில் பரவலாகக் கடைபிடிக்கப் படுகிறது.
சோதனைகள் மூலமாகவும், அனுபவபூர்வமாகவும் கீழ்க்கண்ட நோய்கள் குணமாக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
* மலச்சிக்கல் - ஒரே நாளில்
* வயிற்றில் பித்தம் மற்றும் வாயுப் பொருமல் - இரண்டு நாட்கள்
* சர்க்கரை வியாதி - ஏழு நாட்கள்
* இரத்த அழுத்தம் - நான்கு வாரங்கள்
* புற்று நோய் - ஆறு மாதங்கள்
* காசநோய் - மூன்று மாதங்கள்
நன்றி: தி ஹெல்த் சர்வீஸ்
மேற்கண்ட நீர் சிகிச்சையை முறையாக கடைபிடித்தால் பலன் நிச்சயம் உண்டு...
ஆரம்பத்தில் ஆறு குவளை நீர் பருக சிரமமாக இருக்கும்...
மேலும் உடலின் தேவைக்கு அதிகமாக கட்டாயமாக பருகுவதும் கூடாது...
ஆகவே, முதலில் கொஞ்சம் கொஞ்சமாக உடலின் தேவைக்கு தக்க, அளவோடு பருக ஆரம்பித்து...
பின்னர், உடலின் ஒத்துழைப்போட நீரின் அளவை அதிகரிக்க வேண்டும்.
செம்பு பாத்திரத்தில் இரவில் நீர் ஊற்றி வைத்து மறுநாள் பருகலாம்...
நீர் பருகும் போது அமர்ந்த நிலையில், சிறுக சிறுக பருக வேண்டும்.
சாப்பிடுவது போல சுவைத்து மெதுவாக விழுங்குதல் வேண்டும்.
மேலும், குளோரின் போன்ற ரசாயனங்கள் கலந்த நீரை பருக கூடாது.
நீரில் உள்ள கிருமிகளை அகற்ற...
மண்பாண்டம் பயன்படுத்தலாம்.
அல்லது
வாழை பழத்தோலையும் பயன்படுத்தலாம்...
குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
'குஸ்டவோ கேஸ்ட்ரோ' என்பவர் தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...
‘‘சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலைகளில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம் உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது.
இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம்...
மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன.
மேலும், தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறையும் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக்களை சுத்தப்படுத்தவும் வாழைப்பழத் தோல் உதவும்...
நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம்.
நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை.
இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள். உலகிலேயே வாழைப் பழ உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்தியாவுக்கு இது இனிப்பான செய்தி..!
தூய நீர் மட்டுமின்றி...
நல்லுணர்வுடன்...
சுத்தமான காற்று...
கலப்படமற்ற, சரியான உணவுகள்...
இவற்றின் இயற்கை தன்மையை முடிந்த அளவுக்கு மாற்றாமல், உணவு தயாரித்து...
சரியான அளவோடு, சரியாக உண்ணும் முறையில்... உண்டால்...
நலமுடன் வளமாக வாழலாம்...

நம்முடைய மதிப்பு


200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு
 பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென
கையைத் தூக்கினர். பேச்சாளார் “உங்களில்
ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன்.
ஆனால், அதற்கு முன்”
எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக்
கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும்
விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர். அவர் அந்த
ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி
அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும்
இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?
என்றார். அனைவரும் இப்போதும் கைகளைத்
தூக்கினர். அவர் தொடர்ந்தார்
“கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை
கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன்
மதிப்பை இழக்கவில்லை. ஆனால்
மனிதர்களாகிய நாம் அவமானப் படும்
போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து
போய் நம்மை நாமே தாழ்த்திக்
கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு
என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள்
தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல்
வாழுங்கள்... எப்பொழுதும் சாந்தமாக இருங்கள்  அலுவலகத்தில் உள்ள  மன அழுத்தத்தை வீட்டிலோ நண்பர்களிடத்திலோ காட்டாதீர்கள் .நீங்கள் எந்த ஒரு உயர் பதவியில் இருந்தாலும் அது நிரந்தரம் என்று நினைக்காதீர்கள் .நண்பர்களை பகைக்காதீர்கள் ...பொறுமை இழந்து வார்த்தையை பயன் படுத்தாதீர்கள் வாழ்க வளமுடன்

OROP - No Delay By Sundar


திங்கள், 19 அக்டோபர், 2015

இன்னும் சில நாட்கள் - Lt Col CR Sundar

நெஞ்சை உருக்கிய கதை.
 
  காலை நேரம்., அலுவலகத்திற்கு
கிளம்பியாக வேண்டும் நான். 
 செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம்.
அய்யோ....
 
  என்ன ஆயிற்று எனக்கு? 
  நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?
 ஒரு நிமிடம் யோசிக்கிறேன்....
 நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.
  காபி வேண்டுமே, என் மனைவி எங்கே?
மணி பத்தாகிவிட்டது
 என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம்.
 
 அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான்.
 அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்...... 
  என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள்.
பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள்.
என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.
  நான் இறக்கவில்லை.,
இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன்.
 ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை.
  என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தெரியவில்லை.
  அய்யோ என்ன செய்வேன் நான்?
எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்?
 நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். "நான் இறந்துவிட்டேனா?" நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா?
   என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால், அவனும் அழுது கொண்டிருக்கிறான்.
நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். அவனை பிரிந்து என்னால் இருக்கவே முடியாது. என் மனைவி, பாசமும், பரிவும் கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட அவள் அழுவாள்.
அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் பாசமே நிறைந்திருக்கும்.
இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.
  அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான்.
 ஆம்.. நான்தான் இறந்துவிட்டேனே.  அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப் பார்க்கிறேன்.
  "ஓ கடவுளே! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள். நான் என் மனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்" என் மனைவி அறையில் நுழைந்தாள். "நீ அழகாக இருக்கிறாய் "
என்று நான் கத்தினேன். நான் அவளால் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை.
உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு சொல்லவே இல்லை.
  "கடவுளே!" நான் கதறினேன். அழுதேன். தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு, என் குழந்தையை கட்டி அணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க , என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, இப்பொழுது நான் அழுதேன்!
 திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். "தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றாள் மனைவி.
ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். ..
  என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் கேட்க முடியும் இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி அணைத்து. " இந்த பிரபஞ்சத்திலேயே நீ மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி, உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்" என்றேன் முதன் முறையாக.
முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர், என் அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள்.  அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
  இந்த இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி.
நண்பர்களே......
 இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது. உங்களது ஈகோவை புறம் தள்ளி விட்டு உங்களது பாசத்தையும் நேசத்தையும் உங்களிடம் நெருக்கமானவர்களிடம் வெளிபடுத்துங்கள்.
  ஏனெனில் உங்களுது பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!!! 
பிடித்திருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

Organic Farming - Lt Col CR Sundar

It is big message but very very important..
HAROON SB..
தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
இனிக்கும் செய்தியல்ல....!
தேனீ...
.............உலகின் மிக சுவாரஸ்யமான,
நுணுக்கமான உயிரினம்.
அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான
மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்
தெரிந்துகொள்ளலாமா.............?
முதலில்... ஆச்சரியம்.
தக்கனூண்டு
சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்
சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.
தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச்
போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,
பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு
தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச்
சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும்
தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித
உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும்
காரணம்.
தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப்,
வாட்ஸ்அப் முறைகளை விடத்
துல்லியமானது.
யானை, ஆமைகளுக்கு
ஞாபகசக்தி அதிகம் என்போம்.
ஆனால்,
அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி
கொண்டவை தேனீக்கள்.
இதுபோல இன்னும்
பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு
உடம்பில் இருக்கின்றன.
ஆனால், அதிர்ச்சி
தரும் விஷயம்...
அந்தத் தேனீக்கள் இப்போது
'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில்
இடம்பிடித்திருக்கின்றன.
ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால்,
நிச்சயம் இதுதான்.
ஒட்டுமொத்த மக்கள்
தொகையாலும் பூமிக்கு விளையாத
நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.
அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு
சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப்
போர்வையைப் போத்துகிறது.
தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி
தெரிந்துகொண்டால்தான், அது
காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட
நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.
தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப்
பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப்
பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச்
சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு.
மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத்
தேனீ.
இதில் இந்திய, இத்தாலிய மற்றும்
கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.
 மத்த தேனீக்கள்
தானாகவே காட்டில் வளரும்.
ஒரு
குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில
நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித்
தேனீக்கள் (பெண்கள்) இருக்கும்.
இதில் ஆண்
தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித்
தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித்
தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.
ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது
மட்டும்தான் வேலை.
ஆண் தேனீக்கு,
ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப்
பாதுகாப்பதும் கடமை.
மற்ற எல்லா
வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.
உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது,
தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச்
சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா
வேலைகளையும் பணித் தேனீக்கள்தான்
கவனிக்கும்.
தேனீக்களின் பொறியியல் அறிவு
அபாரமானது.
தேன் கூட்டை அறுங்கோண
வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு
சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம
முழுசாப் பயன்படுத்த முடியும்.
ஆண்
தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய
அறுங்கோண செல் வடிவத்தில் கூடு
கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர்
வடிவில் செல் கட்டும்.
கூட்டின் கட்டுமானம்
திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித்
தேனீ அதில் முட்டையிடும்.
பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான்
தேனீக்களின் உணவு.
அப்போதைய பசிக்கு
அப்போதே சாப்பிட்டுவிடும்.
அப்புறம் ஏன்
தேன் சேகரிக்கிறது?
குளிர் காலங்கள், பூ
பூக்காத காலங்களில் உணவுத்
தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன்
சேகரிக்கிறது.
தேனீக்கள் தேன் சேகரித்துப்
பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த
உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.
தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள்,
பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில்
இருக்கும் 'தேன் பை’யில்
சேகரித்துக்கொள்ளும்.
அந்த மதுரம்
முழுவதும் செரிக்காமல், தேனீயின்
வயிற்றில் இருக்கும் நொதிகளுடன்
சேர்ந்து திரவமாக மாறிவிடும்.
கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள்,
கூட்டின் வாசலில் காத்திருக்கும்
தேனீக்களிடம் அந்தத் திரவத்தை
ஒப்படைக்கும்.
அதற்காக ஏப்பமிட்டு
ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து
திரவத்தை வெளியில் கொண்டுவந்து
எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.
ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும்.
கூட்டைப் பராமரிக்கும்
தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர்
ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி,
அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச்
சேர்க்கும்.
பிறகு அந்தத் திரவத்தில்
இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக
தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.
பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை
மெழுகைப் பூசிவைக்கும்.
இத்தனை
நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம்
சுவைக்கும் தேன் உருவாகும்.
தேன்
எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை
தேனிக்களுக்கு எனக் கூட்டில்
விட்டுத்தான் எடுப்பார்கள்.
அதுதான் தேன்
சேகரிக்கும் தர்மம் !
இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ
அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.
இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான்
அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில்
வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப்
பறக்கும்.
அதை எந்த ஆண் தேனீ துரத்திப்
பிடிக்கிறதோ, அதோடுதான் இணை
சேரும் ராணி.
புணர்ச்சி முடிந்தவுடன்
ஆண் இறந்துவிடும்.
அதன் பிறகு ராணித்
தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து
வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான்
வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!
தேன் சேகரிப்பதற்கான தகவல்களை
தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை
அட்டகாசமானது.
உணவுத் தேவை
ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள்
முன்னே சென்று பூக்கள் இருக்கும்
இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக்
கூட்டுக்குத் திரும்பும்.
கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள்,
தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது
சோலை எந்தத் திசையில் எவ்வளவு
தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித்
தெரிவிக்கும்.
இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட
நடனம் மற்றும் வாலாட்டு நடனம்.
வட்ட
நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள்
இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.
வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை
ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே
பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு
நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது
என்றும் அர்த்தம்.
வாலை வேகமாக
ஆட்டினால், சோலை அருகில் உள்ளது
என்றும், மெதுவாக ஆட்டினால்,
தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.
சூரியன், சோலையின் திசை, தங்கள்
கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும்
சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.
இந்த நுட்பமான நடன ரகசியத்தைக்
கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர்
கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு
கொடுத்தார்கள்.
தேன் சேகரிக்கும் போது தேனீக்களின்
காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின்
மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல்
உட்காரும்போது, விதவிதமான
கூட்டணியுடன் பரவும்.
இதுதான்
காடுகளின், சோலைகளின் பரவலுக்குக்
காரணம்.
தேனீக்களை அதிகம்
காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.
காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே
இயற்கையாகவே அடர்ந்த காடுகள்
உருவாகிவிடும்!''
''அழியும் உயிரினம் பட்டியலில் இடம்
பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன
ஆபத்து?''
''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய
நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும்
உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில்
மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு
தேனீக்கள் அழிந்துவிட்டன.
அதாவது,
தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42
சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
இன்னும்
இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.
ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை
வரலாம்.
தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம்,
Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD.
அதாவது கூட்டில் இருந்து உணவு
சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள்
கொத்துக் கொத்தாகக்
காணாமல் போய்விடும்.
ராணி மட்டும்
கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள்
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு
கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால்,
ராணித் தேனீ என்ன செய்வதெனத்
தெரியாமல் குழம்பி, சீக்கிரமே
இறந்துவிடும்.
இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும்.
பணித்
தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு.
அதில்
முக்கியமானது... செயற்கை உரம்,
பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட
பயிர்கள்.
செயற்கை உரத்தில் உள்ள நியோ
நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள்,
தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து
அவற்றின் நினைவுத்தினை
மழுங்கடித்துவிடும்.
இதனால்
கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய்
பறந்துபோய் அலைந்து திரிந்து
இறந்துவிடும்.
மரபணு மாற்றப்பட்ட உணவுப்
பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர்
சீட்ஸ்’ என்பார்கள்.
அதாவது, அந்தப் பயிர்கள்
'விதை தானியத்தை’ உருவாக்காது.
மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.
அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின்
மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்
செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி,
ஒரு கட்டத்தில் தேனீக்களைக்
கொன்றேவிடும்.
இப்படி விவசாயத்தில் 'வணிக
லாபத்துக்காக’ மனிதன் செய்த பல
மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.
ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து
வருடங்களாக விவசாய உற்பத்தி
பெருமளவு குறைந்து வருவதற்குக்
காரணம் தேனீக்களின் இறப்பு எனத்
தெரியவந்தது.
அதனால், அங்கு செயற்கை
உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள்
போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.
வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து
தங்கள் வயல்களில் பறக்கவிட்டு
மகரந்தச்சேர்க்கை உண்டாக்க
முயற்சிக்கிறார்கள்.
பல லட்சம் தேனீக்களை
அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு
தேனீயைக்கூட உருவாக்க முடியாது.
இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று
வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார்
bb
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

எம்.பி. பற்றி

இதோ ஒரு எம்.பி யின் அரசு வருமான கணக்கு படித்தபின் பகிரவும் இந்த செய்தியை நாடறிய செய்யுங்கள்.
மாதச்சம்பளம்    - 50000
இதர வருமானம் - 45000
மாத அலுவலக.  - 45000
செலவு
மகிழுந்து பயண - 48000
செலவு
( ரூ 8 * 6000 km )
தினப்படி            - 1000
சட்டசபை கூடும்போது
புகைவண்டியில் முதல் வகுப்பு எத்தனை முறை போனாலும் இலவசம்.
வருடத்திற்கு 34 முறை விமானத்தில் இலவசம் ( Business class )
டில்லியில் தங்கும் அறை இலவசம்.
மினசார கட்டணம் இலவசம்
(50000 unit )
தொலைபேசி கட்டணம் இலவசம்.
( 1,50,000 calls )
ஒரு எம்.பி யின் மாதச்செலவு 2.92 இலட்சம் வருடத்திற்கு 3,504,000 ஐந்து வருடத்திற்கு 1,75,00,000
மொத்தம் 543 எம்.பி களுக்கு ஐந்து ஆண்டிற்கு 9,50,25,00,000 ( அதாவது சுமார் 950 கோடி )
இது அத்தனையும் நம் வரிப்பணம்
படிக்காத இந்த அரசியல்வாதிகளுக்கு இருக்கும் சலுகை நமக்கு உணவளிக்கும் விவசாய்க்கு இல்லை.
ஜெய்ஹிந்த்


Unity! By Sundar

செவ்வாய், 13 அக்டோபர், 2015

ஓர் அழகான கதை. உழைப்பின் உன்னதத்தை உணர்த்துகின்ற கதை-

கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.
ஒரு நாள் பெரும் காற்று வீசியது. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன.
பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன் என்றது .
ஆண் குருவி சொன்னது. அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது. நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்.என்று பெண் குருவிக்கு தன்னம்பிக்கை ஊட்டியது .
கடலை எப்படி வற்றவைப்பது?
முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம். எனவே நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயல வேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் கொட்டுவோம். மறுபடியும் திரும்பி வந்து மீண்டும் நீரை நிரப்பிக் கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம். இப்படியே இடைவிடாமல் செய்து கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும். நமது முட்டைகள் வெளிப்படும்.
இதையடுத்து இரண்டு குருவிகளும் தன்னம்பிக்கையுடன் ஊக்கத்துடன் செயலில் இறங்கின. விர்ரென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக் கொண்டன. பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன. மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின. கொண்டுபோய் தொலைவில் கக்கின.
இப்படியே இரவு பகல் நாள் முழுவதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, இவற்றின் நீர் அகற்றும் படலம்.
அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக முனிவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். மகா சக்திகள் நிறைந்த மகான் அவர். ஆளில்லாத அந்தப் பகுதியில் கீச் கீச் என்ற சப்தம் கேட்கவும் அவர் திரும்பிப் பார்த்தார். இரண்டு குருவிகள் பறந்து போவது கண்டு சிரித்தபடி மேலே நடந்தார்.
மீண்டும் கீச் கீச் என்ற சப்தம். குருவிகள் கடலுக்கு மேல் பறந்தன. எதையோ அள்ளின. மீண்டும் பறந்தன. இப்படி பலமுறை நடைபெறவும், முனிவருக்கு வியப்பு. கடலில் இருக்கும் எதைக் கொத்துகின்றன இவை? அங்கு இரை ஏதும் இல்லையே என்று நினைத்தார் அவர்.
உடனே அந்த மகான் கண்களை மூடினார். உள்ளுக்குள் அமிழ்ந்தார். மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்ச்சிகளும் படம்போல் ஓடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும் கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.
உடனே தனது தவ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன. ஆளுக்கொன்றாக முட்டைகளை பற்றிக் கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன.
நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா? என்றது ஆண் குருவி பெருமிதமாக.
முனிவர் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார். இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை. முனிவரின் அருளால். ஆனால் அந்தக் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ, எதுவுமே தெரியாது.ஆனால் தன்னம்பிக்கையுடன் கடல் நீரை அள்ளின .
அதே சமயம் குருவிகள் மட்டுமே கடல் நீரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவர் தம் வழியே போயிருப்பார்.
அவரை மனம் நெகிழ வைத்தது எது? அவற்றின் உழைப்பும் முயற்சியும்தான். ஆக இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது, குருவிகளாலும் தான். முனிவராலும் தான். முனிவரின் ஆற்றல் அவற்றுக்குப் பக்க பலமாக வந்து சேர்ந்தது. குருவிகளின் உழைப்புத்தான் அதற்கு அடிப்படையாக அமைந்தது.
அன்பு நண்பர்களே .
எல்லையில்லா ஆற்றல் பெற்றவர்களே இளமைப் பருவம் வாழ்வின் இன்றியமையாப் பருவம்.
பருவத்தே பயிர் செய் என்பார்களே. இளமையில் வியர்வை சிந்தாவிட்டால் முதுமையில் கண்ணீர் சிந்த வேண்டி இருக்கும்.
எனவே விழித்திருக்கும் நேரமெல்லாம் உழைத்துக் கொண்டிருங்கள். வாழ்வில் எல்லா நேரமும் நல்ல நேரம்தான். உழைக்காத நேரம்தான் ராகு காலம். திட்டமிடுங்கள். ஒவ்வொன்றையும் திட்டமிட்டு உழைத்திடுங்கள் .
இந்த கதை பாலகுமாரன் அய்யாவின் கடலோர குருவிகள் நாவல் புத்தகத்தில் படித்தவை .

வியாழன், 8 அக்டோபர், 2015

Dwaita among Tamil Nadu Ex-Servicemen - Lt Col CR Sundar

          Advaita, the absence of duality, is a doctrine propounded by Adi Shankara the theologian and philosopher who lived in early 8th century AD. But then he was born in a region which is now in the state of Kerala. He could not have been a native of Tamil Nadu because here the extant philosophy has always been Dwaita or duality.
 
          In Tamil Nadu there is ever a place for two at the top – not more, and certainly, not less. This is true in every field of life.
 
          For example, in politics since the 30s the Justice Party and Congress were on top. No other party could come near them. Since the 70s it is DMK and AIADMK.
 
          In the cine field right from the time of talking movies it was MGR and Sivaji Ganesan who were the reigning super heroes. In the 70s they moved out and Rajnikant and Kamal Haasan took their places. In recent times it is Vijay and Ajit. New stars rise every day but without a matching contrast they all disappear.
 
          Same too, it appears, is the state of affairs with ExServicemen (ESM) of Tamil Nadu. They fall into two categories viz., the Normalites and the A-politicalites.
 
          Let us first study the A-politicalites. They believe that retired defence personnel should lead a life of silent, self seeking, indolence. They want their followers to limit their political activities to merely voting in the parliamentary and assembly elections. They don’t understand Panchayati Raj and its elections, and so keep away from them. They consistently vote for AIADMK which is the worse of the two Dravidian major parties when it comes to looking after the welfare of Ex-Servicemen.
 
          In spite of their expressed aversion to politics some, just a few, A-politicalite associations act as conduits for distribution of cash for votes among its ESM members. Such actions are hush-hush and outwardly they don’t show any indication of that. On this issue it should be said in fairness that they don’t show party bias and act in favour of anyone who approaches them.
          Though the A-politicalites write thundering mails on the net they firmly believe in outward inactivity. In recent times there is a virulent agitation going on in Northern India demanding One Rank One Pension. The A-politicalites of Tamil Nadu openly oppose the agitation though they covet the benefits of the struggle by brother veterans.
 
          The Normalites on the other hand believe in struggling for the betterment of the lives of ESM. They also believe that ESM need not be a-political. After retirement every one is a normal citizen and should take part in normal political activities which includes struggling on the streets as well as taking part in electoral activities such as candidacy and canvassing.
 
          In a recent article entitled ‘Army needs to learn’ its erudite author Brig V Mahalingam argues for just such a stand. He says, “Where do we go from here? Can the services ever have its say in India? Yes. The solution lies in ESM being able to elect their representatives to the Lok Sabha and the Legislative Assemblies.” This is exactly the view of the Normalites.
 
          But MLAs and MPs just don’t come off the top. They have to be cultivated from the panchayat level. Therefore the Normalites believe in taking part in election for ward members and chairmen of village panchayats, panchayat unions, district panchayats, town panchayats, municipalities and city corporations. Today’s councilor is tomorrow’s MLA, today’s MLA is tomorrow’s MP. That is the trajectory visualized by  of the Nomalites.
 
          Thus we see that the veterans of Tamil Nadu are split between the Normalites and A-politicalites with the Normalites having the greater strength cutting across ranks, services, arms and corps. Normalites are also getting ready for elections as candidates of Sainik Samaj Party fully supported by many constituents of United Front of ESM.
 
          So, how would the people in Delhi view the Dwaita in Tamil Nadu ESM community?
 
          Some years back I was talking to a leading Congress person in Chennai. When asked a similar question she had this to say, “We are not really interested in coming to power in Tamil Nadu. But we want that whoever is in power here should support us in Delhi.” Today BJP seems to be following an analogous policy. Perhaps that is the way Veterans of Tamil Nadu will be viewed by Delhi.
 
          As of now it appears the A-politicalites may be more connected with Delhi, but Normalites have a greater following, are vastly more numerous in number, are organizing themselves more rapidly and can only ignored by Delhi at their peril.
 
Lt Col CR Sundar, psc, MSc (Defence Studies),
President Tamil Nadu Sainik Samaj Party

FOURTH SEPOY MUTINY 20?? - Lt Col CR Sundar

 
 
In the past the greatest changes in our country were wrought by Sepoy uprisings. Three such uprisings brought about immense transformations. All three of them came about as a culmination of discontent among the ranks of the armed forces caused by the callous attitude of the rulers of the day. They resulted in bloodshed and in their own way weakened the rulers and paved the way for their exit.
Vellore Sepoy Mutiny 1806.
This took place at Vellore Fort in July 1806. The reason was the long existing hated practice of flogging as a punishment which existed within Indian Regiments.
In its aftermath flogging as a punishment was abolished in India.
Indian Sepoy Mutiny 1857.
Whereas tallow and lard-greased cartridges were the trigger to the mutiny there existed long pending grievances over the issue of promotions based on seniority. Also they kept increasing the number of European officers in Indian battalions. This led to slow progress in promotions and very few Indians could rise to get a commission. Even those that did could reach commissioned rank only when they were too old to be effective.
The rebellion wiped out the East India Company and the last vestiges of the Moghul rule. It marked the beginning of a new rule.
Navy Ratings Mutiny 1946.
Leading Signalman MS Khan and Petty Officer Telegraphist Madan Singh took the lead and formed the Naval Central Strike Committee. The strike call given by them found immediate response in all the naval ports of India.
Though the loss of life was minimal the mutiny made the British colonial rulers aware that India has reached a ‘point of no return’ in her struggle for independence.
OROP Jawans Mutiny 20??.
The Government of India has not yet realized the Jawans, the Sepoys of today, know that for long they have been given a bad bargain under the pretext of keeping the age profile young.
Let us take the case of two lads aged about 20 years in 1975. One joins the Indian Army as a Sepoy and the other joins a civil government service. In 1990 at the age of 35 and a service of 15 years the sepoy would have been sent on a pension averaging about Rs. 3,000 per month. The government employee would retire in 2015 at the age of 60 years.
In the 25 years between 1990 and 2015 the military pensioner would have earned Rs. 9 lakhs as pension whereas the government servant would have earned close to Rs. 1.25 crores as salary and perks and would retire with a much larger pension.
Therefore the minimum that can be done is to accept OROP. “The principal of OROP implies that uniform pensions be paid to Armed Forces personnel retiring in the same rank with the same length of service irrespective of the date of their date of retirement and any further enhancement in the rates of pension to be automatically passed on to the past pensioner”. It will help the retired ExServiceman get at least 30% of what his civilian counterpart gets.
Those jawans serving today know that they would be subject to the same misfortune suffered by their fathers. Retirees are struggling today for justice. It will not be long before serving soldiers rise in mutiny against this injustice. Though that would be a sad day it appears inevitable.
Conclusion
The government may consider the following questions deeply.
1.     Today we have enemies at our door steps. Can we afford a mutiny in the armed forces?
2.     During the British rule mutinies were crushed by ruthless summary justice. The same cannot happen today.
3.     Even if the mutiny is crushed OROP, or something better will have to be accepted. Why not accept it before we reach a ‘point of no return’?
 
Lt Col CR Sundar, psc MSc (Defence Studies)

நான்காவது சிப்பாய் கலகம் 20?? - Lt Col CR Sundar

 
 
ஆங்கிலேயர் ஆட்சியில் நம் நாட்டில் மூன்று முறை பெரிய அளவில் சிப்பாய் கலகங்கள் நடந்துள்ளன. அந்த கலகங்களை அடக்குவதில் ஆங்கிலேயர்கள் ஏராளமான இந்தியர்களை கொன்று குவித்தனர். இருப்பினும் அவை ஒவ்வொன்றும் நாட்டில் பல முக்கியமான மாற்றங்களை உண்டாக்கி இருக்கின்றன.
 
1.  வேலூர் சிப்பாய் கலகம் 1806
இது வேலூர் கோட்டையில் 1806ல் நடந்தது. இதற்கு பல காரணங்கள்சொல்லப்பட்டாலும் முக்கியகாரணம் சவுக்கடி தண்டனையே ஆகும்.தமிழர்கள் அதை ஏற்க மறுத்தனர். அந்த ஆண்டு வேலூரிலிரிந்து சிலசிப்பாய்கள் சென்னைக்கு இழுத்து செல்லப்பட்டனர். அவர்களை விசாரித்து அவர்களுக்கு சவுக்கடி தண்டனை அளிக்கப்பட்டது. அவர்கள் வேலூர்திரும்பியதும் கலவரம்வெடித்தது. 200க்கு அதிகமான ஆங்கிலேயர்கள்கொல்லப்பட்டனர். 100 சிப்பாய்களும் கொல்லப்பட்டனர்.
இறுதியில் சவுக்கடி தண்டனை சட்ட விரோதமாக்கப்பட்டது.
 
2.  இந்திய சிப்பாய் கலகம் 1857
இந்த கலகம் ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்தது மாட்டு மற்றும் பன்றி கொழுப்பு தடவியதோட்டாக்கள் என்றாலும் அப்போதைய ராணுவத்தில் பல காலமாக நிலவி வந்த அதிருப்தி அதன்பின்னணியில் இருந்தது. சம்பள உயர்வு, காலாகாலத்தில் பதவி உயர்வு அளிக்கப்படாமல் இருந்தது, எல்லா உயர் பதவிகளையும் ஐரோப்பியர்களே பிடித்துக் கொண்டார்கள் போன்றகோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வில்லை.
பல்லாயிரம் இந்தியர்களும் பல ஆங்கிலேயர்களும் இதில் மாண்டார்கள்.
இதன் முடிவில் இராணுவத்தில் சீர்திருத்தங்கள் வந்தன. முகலாய சாம்ராஜ்ஜியமும் கிழக்கிந்தியகம்பெனியும் மறைந்து விட்டன.
 
3.  கடற்படை சிப்பாய் கலகம் 1946
கடற்படையை சேர்ந்த முன்னிலை சங்கதியாளர் MS கான் என்பவரும் தந்தியாளர் மதன் சிங்என்பவரும் சேர்ந்து கடற்படை வேலைநிறுத்த மையம் என்ற இயக்கத்தை உருவாக்கி 1946ல்வேலை நிறுத்தம் ஆரம்பித்தனர்.
அதிக உயிர் சேதமின்றி அந்த கலகம் ஒடுக்கப்பட்டது என்றாலும் அன்று ஆண்டுகொண்டிருந்தஆங்கிலேயர்களுக்கு இந்திய சுதந்திர போராட்டம் உச்ச கட்டத்தை எட்டிவிட்டது என்பதுபுலனானது.
 
4.  OROP சிப்பாய் கலகம் 20??
இன்றைய அரசாங்கம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பணி புரியும் சிப்பாய்களின் வயதுகுறைந்ததாக இருக்கவேண்டும் என்பதால் சிறு வயதிலேயே சிப்பாய்களை சொற்பஓய்வூதியத்துடன் வீட்டுக்கு அனுப்புவதில் அரசாங்கம் தம்மை ஏமாற்றுகிறது என்பதை அவர்கள்நன்கு அறிந்திருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு 1975ஆம் ஆண்டு 20 வயது எட்டிய இரு இளைஞர்களை எடுத்துக்கொள்வோம்.ஒருவர் சிப்பாய் ஆகிறார், மற்றவர் அரசு ஊழியத்தில் சேருகிறார் என வைத்துக்கொள்வோம். 1990ல் தன் 35 ஆவது வயதில் 15 ஆண்டுகள் பணிக்குப்பின் சராசரி மாதம் ரூ 3,000 வரும் அளவுக்குஓய்வூதியத்துடன் சிப்பாய் ஆனவர் வெளியே அனுப்பப்படுகிறார். அனால் அரசு ஊழியர் 60 வயதுவரை பணி புரிந்து 2015ல் தான் வெளியே வருவார்.
ஆக 1990 லிருந்து 2015ஆம் ஆண்டு வரையிலான 25 ஆண்டுகளில் சிப்பாய் ஆனவர் ரூ. 9 லட்சம்வரை ஓய்வூதியம் பெற்றிருப்பார். ஆனால் அரசு ஊழியரோ சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும்இதர சலுகைகள் மூலம் ஏறக்குறைய ரூ. 1.25 கோடி சம்பாதித்துவிட்டு அதன் முடிவில் சிப்பாயைவிட பன் மடங்கு உயர்ந்த அளவு ஓய்வூதியம் பெற்று வெளியே வருவார்.
ஆகையால் தன் வாழ்க்கையின் முக்கிய ஆண்டுகளை தேசத்திற்காக அற்பணித்த சிப்பாய்களுக்குஅவ்வப்பொழுது ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். அதாவது ஒரே பதவியில் ஒரே அளவுஆண்டுகள் சேவை செய்திருந்தால் அவர்கள் எப்பொழுது ஒய்வு பெற்றிருந்தாலும் அவர்களுக்குஒரே அளவு ஓய்வூதியம் அளிக்கப்படவேண்டும். முன்னால் ஓய்வு பெற்றவர்களுக்கு, இன்று ஓய்வுபெறுபவர்களுக்கு என்ன ஓய்வூதியம் கிடைக்கிறதோ அதே அளவு ஓய்வூதியம்கொடுக்கவேண்டும். இதைத்தான் "சம சேவை சமச்சீர் ஓய்வூதியம்" அல்லது One Rank One Pension - OROP என குறிப்பிடுகிறோம்.
 
இன்று பணியில் இருக்கும் சிப்பாய்கள் நாளை தங்களுக்கும் இதே கதிதான் என்பதை நன்குஅறிவார்கள். மேலும் இந்த நிலை மாற முன்னாள் படை வீரர்கள் போராடுகிரார்கள் என்பதையும்அறிவார்கள். நியாயம் கேட்டு இவர்கள் கலகம் ஆரம்பிக்க வாய்ப்பு இருக்கிறது. இது நடக்கக்கூடாதவிஷயம் என்றாலும் மத்திய அரசின் திறமையற்ற கையாளுதலால் நடந்தாலும் நடக்கலாம்.
நாட்டு நலனை கருதி கலகத்தை தவிர்க்க அரசு OROP கூடிய சீக்கிரம் அளித்து விட வேண்டும் என வேண்டுகிறோம்.
  
 எழுதியவர் கர்னல் சுந்தர் psc MSc (Defence Studies)
 

செவ்வாய், 6 அக்டோபர், 2015

நம்பமுடியாத இந்தியர்கள் - Col CR Sundar

"வியக்க வைத்த விவசாயி..."
உலகினில் முதல் தொழில்...
உன்னதமான தொழில்...
உயர்ந்த தொழில்...
விவசாயம்...
அந்த விவசாயம் செய்ய,
கடவுள் என்னும் முதலாளி...
கண்டெடுத்த தொழிலாளி தான் விவசாயி...
அப்பேற்பட்ட விவசாயியையும்... விவசாயத்தையும் இன்று ஏளனமாக பார்க்கும் நம் நாட்டில்...
உலகையும்...
அமெரிக்க ஜனாதிபதியையும்...
வியக்க வைத்தவர் தான்...
மாண்புமிகு விவசாயி. குடிவாடா நாகரத்தினம்...
ஆந்திர அரசு, ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு இவரின் வாழ்க்கையை பாடமாக  சேர்த்திருக்கிறது...
ஆந்திர முதல்வரே இவரது பண்ணை வீடு விஜயத்தை ஒரு நாள் நிகழ்ச்சியாக சென்று சந்தித்திருக்கிறார்...
இன்னும் மேலே சொன்னால்...
அமெரிக்க ஜனாதிபதியே, இந்தியா வந்த போது இவரை தேடி சந்தித்திருக்கிறார்...
இவ்வளவு பெருமைக்குரியவரை சந்திக்கும் ஆர்வத்துடன் மதுரையிலிருந்து S.P.செந்தில்குமார் ஆகிய நான்...
ஹைதராபாத் தில்சுக் நகரில் உள்ள கெளதம் நகர் காலனியில் அவர் வீட்டுக்கு சென்றேன்...
தேசிய அளவில் டெல்லியில் நடைபெற்ற 'சாதனை விவசாயிகள் மாநாட்டின் சிறப்பு விருந்தினராக' கலந்து... பாராட்டும், 10 லட்சம் பணமும் பரிசாக பெற்று அவர் வீடு திரும்பிய நாள் தான் அன்று...
வசதியான வீடு..!
செழிப்பான பணத்தில் கட்டியது என்பதை வீட்டின் தோற்றமே காட்டியது. 
காலிங் பெல்லை அழுத்தி காத்திருந்தேன்...
கதவை திறந்தவர், மாமனிதர் குடிவாடா நாகரத்தினம்...
என்னை அறிமுக படுத்தியதும் சந்தோஷமாக வரவேற்றார்...
முதலில் அவரது வீடு முழுவதையும் சுற்றிக் காண்பித்தார்...
336 விருதுகள், 9 சர்வதேச விருதுகள்... என வீடு முழுவதும் விருதுகள் அலங்கரித்து நின்றன.
அனைத்து அறைகளும் உயர்தரமான பொருட்களால் செதுக்கப்பட்டிருந்தன...
பாத்ரூம் பிட்டிங்க்ஸ் கூட எங்கிருந்து வரவழைத்தது என்று சொன்னார்...
எனக்கு ஒன்றும் புரியவில்லை... எதற்கு இதையெல்லாம் செய்கிறார்!... என்று தெரியவில்லை.
"வீட்ட முழுசா பாத்துட்டீங்களா..! எப்படி இருக்கு..?" என்றார்...
"ஒரு டாக்டரோட வீடு மாதிரி 'ரிச்'சா இருக்கு..!" என்றேன்.
"அதுக்காகத்தான், வீட்ட சுத்தி காண்பிச்சேன்...
ஒரு விவசாயி... டாக்டர் மாதிரியோ, என்ஜினியர் மாதிரியோ ஏன் வாழ முடியாது?... அவர்களும் வசதியாக வாழ முடியும்... என்பது தான் எனது கான்செப்ட்..." என்று பேச ஆரம்பித்தவர் தொடர்ந்து...
"இதை மற்ற விவசாயிகளுக்கும் புரிய வேண்டும் என்பதற்காகத்தான், உங்களுக்கு வீடு முழுவதும் சுத்திக் காண்பிச்சேன். இந்த வீடு கூட என்ஜினியர் உதவியில்லாமல் நானே டிசைன் செய்து வடிவமைத்து கட்டியதுதான்..." என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக கொடுத்தார்.
"பள்ளிப்படிப்பை எனது சொந்த ஊரில் முடித்து விட்டு கல்லூரி படிப்பிற்காக சென்னை ரயிலேறினேன்...
அங்கு 'டிப்ளமோ இன் எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங்' படித்து முடித்தேன்...
அதன்பின் அண்ணா சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் இரண்டு வருடம் வேலை பார்த்தேன்.
நல்ல வேலை, நல்ல சம்பளம்.
ஆனாலும் என் மனம் நிலை கொள்ளவில்லை...
என் நாட்டமெல்லாம் எனது தாய், தந்தையின் தொழிலான விவசாயமாகவே இருந்தது...
விவசாயத்தில் ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னை தூங்க விடாமல் செய்தது...
இரண்டு வருடங்களில் வேலையை விட்டு விட்டு ஹைதராபாத் வந்தேன்...
அதற்குள் திருமணமும் முடிந்தது...
கையில் சேமித்து வைத்திருந்த பணத்திற்கு ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் தரமதி பேட்டை என்ற இடத்தில் 17 ஏக்கர் நிலத்தை வாங்கினேன்...
கரடுமுரடான பாறைகள் நிறைந்த அந்த இடம் விவசாயத்திற்கு ஏற்றதல்ல என்று ஒதுக்கி வைத்திருந்தார்கள்...
துணிந்து வாங்கினேன்...
என்னிடம் இருந்த பணத்திற்கு அப்படிப்பட்ட நிலம்தான் கிடைத்தது...
முழுவதும் தரிசாக கிடந்த அந்த நிலத்தை வளமாக்க... நான், எனது மனைவி சத்யவதி, எனது தாயார் மூவரும் இரவு பகலாக கடினமாக உழைத்தோம்...
இன்று, தரிசு நிலத்தை தங்கம் விளையும் பூமியாக மாற்றி விட்டோம்...
இப்போது, எனது நிலத்தில் ஊட்டி, கொடைக்கானலில் வளரும் பூச்செடிகளையும், காபி செடிகளையும் கூட வளர்க்க முடிகிறது...
அந்தளவிற்கு வளமிக்க மண்ணாக நிலம் மாறியுள்ளது...
விவசாயி என்பவன் எதையும் வெளியில் காசு கொடுத்து வாங்கக் கூடாது என்பதுதான் எனது எண்ணம்...
அவனுக்கு வேண்டிய உணவை அவனே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்...
ஒரே வகையான பயிர்களை நிலம் முழுவதும் வளர்ப்பதில்லை. பலவகை பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும்.
நான் 75 வகையான பொருட்களை உற்பத்தி செய்கிறேன்.
கலப்பு பண்ணை முறையில் 'இயற்கை வேளாண்மை' செய்து வருகிறேன்.
2003-ம் ஆண்டு இந்தியாவில் 'திருந்திய நெல் சாகுபடி' முறையை முதன்முதலாக பயன்படுத்தி ஒரு ஹெக்டேருக்கு 15.4 டன் நெல்லை உற்பத்தி செய்து சாதனைப் படைத்தேன்...
இதுநாள் வரை இதுதான் அதிக விளைச்சலுக்கான சாதனையாக உள்ளது.
என்னை பின்பற்றி அடுத்த ஆண்டு ஆந்திராவில் உள்ள 10,500 விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையில், பயிரிட்டார்கள்.
இதற்காக பல இடங்களுக்கு சென்று பேசினேன்...
வெளிநாடுகளில் இருந்தும் என்னை அழைத்தார்கள்...
இந்த நிலையில்தான் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி எனக்கொரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தார்.
அதற்காக எனது நிலத்துக்கு அருகில் தற்காலிக ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைத்து, எனது பண்ணையில் ஒருநாள் முழுவதும் இருந்தார்.
ஒரு சாதாரண விவசாயியை தேடி மாநில முதல்வர் வந்தது அதுதான் முதல் முறை...
அந்த நிகழ்ச்சிக்கு பி.பி.சி..., சி.என்.என். தொலைக்காட்சி முதற்கொண்டு இந்தியாவின் முன்னணி பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர்.
அவர்கள் முன்னிலையில், "ஒரு மாதத்திற்கு நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்?" என்று கேட்டார் முதல்வர்.
இதன்மூலம் தனது ஆட்சியில் விவசாயிகள் மிக நன்றாக இருப்பதாக பத்திரிகையாளர்கள் மூலம் நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதுதான் அவர் எண்ணம்.
நான் வருமானத்தை சொல்லவில்லை. 'மாநிலத்திலே மிக அதிகமாக சம்பளம் வாங்கும் அரசு அதிகாரியை விட நான் அதிகமாக சம்பாதிக்கிறேன். நிம்மதியாக இருக்கிறேன்...' என்றேன்.
அதற்கடுத்த ஆண்டு 2006-ல் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தார்.
அவர் தனது நிகழ்ச்சியில் என்னை சந்திப்பதையும், ஒரு நிகழ்ச்சியாக வைத்திருந்தார்.
எனது விவசாய முறையை அறிந்த அவர், 'ஒரு விவசாயி, ஒரு விஞ்ஞானியை விட மேன்மையானவர்' என்றார்.
என்னை அமெரிக்கா வரும்படி அழைத்தார்...
'எனது சேவை எனது தாய் நாட்டுக்கே' என்ற கொள்கையில் உறுதியாக இருந்த நான், அந்த வாய்ப்பை மறுத்து விட்டேன்.
நான் பிழைக்க முடியாமல், பிழைக்கத் தெரியாமல் விவசாயத்திற்கு வரவில்லை.
மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே விவசாயத்திற்கு வந்தேன்.
இந்த 17 ஏக்கர் நிலத்தை ரூ. 3.4 லட்சத்திற்கு வாங்கியபோது என்னிடம் வேறு எந்த பணமும் இல்லை. இன்றைக்கு எனது சொத்தின் மதிப்பு 17 கோடி ரூபாய்.
விவசாயம் மூலமே இந்த வருமானம் வந்தது.
என்னால் முடியும்போது மற்ற விவசாயிகளாலும் நிச்சயமாக முடியும்.
என் சொத்து மதிப்பை பகிரங்கமாக வெளியிடுவதற்கு  காரணமே...
விவசாயம் நஷ்டம் தரும் தொழில் என்று விவசாயிகளே நினைக்கிறார்கள். அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும்...
திட்டமிட்டு பயிரிடுங்கள்...
பூமித்தாயைப்  போல் அள்ளிக் கொடுப்பவள் யாரும் இல்லை... அதற்கு நானே உதாரணம்...
பெரும்பாலான விவசாயிகள் விளைவிப்பதோடு தங்களின் கடமை முடிந்ததாக நினைக்கிறார்கள்...
இங்கு சந்தைப்படுத்துவதுதான் கடினம்...
விளைபொருட்களை நேரடியாக மக்களிடம் நானே விற்கிறேன்...
இதை சரியாக செய்தாலே போதும்.
விவசாயம் பணம் கொட்டும் ஒரு தொழிலே தான்.
எனது நிலத்தில் இது வரை செயற்கை உரங்கள். பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தியது இல்லை.
அதனால் மண் வளம் மிக நன்றாக இருக்கிறது...
எந்த வகை செடியையும் என்னால் இதில் வளர்க்க முடியும்.
இயற்கையான முறையில் விளைவித்த பொருள் என்றால் மார்க்கெட்டில் விலை அதிகம்...
ஆனால், நான் அதிக விலைக்கும் விற்பதில்லை...
ஒரு கிலோ அரிசி ரூ.45 என்றால், எனது விலை ரூ.47 ஆகத்தான் இருக்கும்.
இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்வதால் இதுவே எனக்கு நல்ல லாபம்.
ஆர்கானிக் முறையில் விளைந்த பொருள் சாதாரண விலைக்கே கிடைப்பதால் வாடிக்கையாளருக்கும் லாபம்.
எனது பொருட்களின் உற்பத்தியை விட தேவை அதிகமாக இருக்கிறது. அதனால் 20 கிலோ அரிசி கேட்பவர்களுக்கு 10 கிலோதான் கொடுக்க முடிகிறது.
மேலும், எனது பண்ணையில் 12 பசுமாடுகள் வைத்துள்ளேன்.
எந்த மாட்டிற்கும் நோய் வந்து ஊசியோ மருந்தோ கொடுத்ததில்லை...
இயற்கையாக அது எவ்வளவு பால் கொடுக்குமோ அதை மட்டும் நாம் எடுத்துக் கொண்டாலே போதும். மாடுகளில் மற்ற மருத்துவ செலவுகள் எதுவும் வராது...
ஒரு விவசாயிக்கு தினசரி வருமானம், வார வருமானம், மாத வருமானம், 6 மாதத்திற்கு ஒரு முறை வருமானம், ஆண்டு வருமானம் என்று ஐந்து வகையான வருமானங்கள் உண்டு.
அதை சரியாக திட்டமிட்டு செய்தாலே போதும். யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை.
நான் வங்கிக் கடனாகவோ, அரசாங்க மானியமாகவோ ஒரு பைசா கூட பெற்றதில்லை.
இது சுயமரியாதை அதிகம் கொண்ட தொழில். 
விவசாயி பிச்சைக்காரனில்லை. 
ஒரு டாக்டர், என்ஜினீயரைவிட விவசாயி என்று சொல்வதில் பெருமையடைகிறேன்” என்று கூறி தனது தோட்டத்துக்கு என்னை அழைத்துப் போனார்.
அங்கு பள்ளி மாணவ-மாணவிகள் இவருக்காக காத்திருந்தார்கள்.
“மாணவர்களுக்கு விவசாயம் சம்பந்தமான விழிப்புணர்வு தருவதை எனது கடமையாக வைத்துள்ளேன்...
இதுவரை 35 ஆயிரம் மாணவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்.
நகரத்தில் வளர்ந்த இன்றைய தலைமுறையினரிடம் 'அரிசி எங்கிருந்து வருகிறது?' என்று கேட்டால்...
'சூப்பர் மார்க்கெட்டிலிருந்து' என்று பதிலளிப்பார்கள்.
அவர்களுக்கு அரிசி உருவாகும் இடத்தையும், ஒரு விவசாயி எத்தனை சிரமப்பட்டு அதை உருவாக்குகிறான் என்பதும் தெரிந்தால்தான் விவசாயத்தின் அருமை தெரியும்.
வருங்காலத்தில் அதை அழியவிடாமல் பாதுகாப்பார்கள்" என்றார்...
தலைவர்களைப் பற்றி தான் பள்ளிக்கூட மாணவர்கள் படிப்பார்கள். ஆனால் விவசாயம் அதைவிட முக்கியம் என்று உணர்ந்த அரசு, ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இவர் இடம் பெற்றதாலே ஏராளமான மாணவர்கள் நாகரத்தினத்தை நேரில் வந்து சந்தித்து செல்கிறார்கள்.
வாழும்போதே மற்றவர்களுக்கு பாடமாக வழிகாட்டியாக அமையும் அதிர்ஷ்டம் சிலருக்கு மட்டுமே கிடைக்கும்.
அந்த அதிர்ஷ்டம் நாகரத்தினத்திற்கும் கிடைத்திருக்கிறது.
நாகரத்தினத்தைப் பற்றி தெரிந்த பலரும் அவரை விவசாயத்திற்கான மானசீக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்...
அப்படி ஒருவர்தான் ஹரியானாவைச் சேர்ந்தவரான வைர வியாபாரியின் மகன் யுவேஷ்...
இவர் நாகரத்தினத்தைத் தனது தந்தை என்றே சொல்கிறார்.
நாகரத்தினத்தின் மூலம் விவசாயத்திற்கு ஈர்க்கப்பட்ட யுவேஷ், பகலில் விவசாய வேலைகளையும், மாலையில் தனது குடும்பத் தொழிலான வைர வியாபாரத்தையும் பார்த்து வருகிறார்.
இப்படி பலருக்கும் மாபெரும் உந்து சக்தியாக நாகரெத்தினம் இருந்து வருகிறார்...
தனது தோட்டத்தில் விளையும் வெண்டைக்காய், கத்திரிக்காய், முருங்கைக்காய் முதலியவற்றை தினமும் பறித்து வந்து தனது வீட்டு வாசலில் வைத்து விடுகிறார்.
அதன் அருகே ஒரு பேப்பரில் காய்கறிகளின் விலையை எழுதி வைத்து, பக்கத்திலே ஒரு உண்டியலையும் வைத்து விடுகிறார்.
வேண்டியவர்கள் அவற்றை எடுத்துக் கொண்டு அதற்கான தொகையை உண்டியலில் போட்டு விடுகிறார்கள்.
இதற்காக ஆட்கள் யாரும் இருப்பதில்லை.
எல்லாமே இயற்கை முறையில் விளைவிப்பதால் 10 கி.மீ. தொலைவில் இருந்து கார் எடுத்து வந்து வாங்கிப்போகும் வாடிக்கையாளர்களும் இவருக்கு உண்டு.
இவரது பண்ணையில் இருந்து வரும் பால் ஆர்கானிக் என்பதால் அதற்கும் வரவேற்பு மிக அதிகம்.
எல்லோர் மனதிலும் தோன்றும் கேள்வியே எனக்கும் தோன்றியது. "உண்டியலில் விற்ற பொருளுக்கு சரியாக பணம் வந்துவிடுகிறதா..?" என்று கேட்டேன்.
"நாம் அவர்களை நேர்மையாளர்களாக நம்பினால் அவர்களும் அப்படியே நடந்து கொள்ளவார்கள். இங்கு நம்பிக்கைதான் முக்கியம்!" என்றார்.
இவரைத் தேடி ஒரு மாநில முதல்வர் வந்ததற்கும் அமரிக்க ஜனாதிபதி வந்து அவர் நாட்டுக்கே அழைத்ததற்கும் காரணம் இப்போதுதான் தெரிந்தது...
நாகரத்தினம் பெரிய கோடீஸ்வரர். அவர் நினைத்தால் பி.எம்.டபிள்யு. காரையே வீட்டு முன் நிறுத்தலாம். ஆனால், அவரிடம் ஒரு டூவீலர் கூட கிடையாது. எங்கு போவது என்றாலும் பொது வாகனத்தையே பயன்படுத்துகிறார்.
ஏனென்று கேட்டால், "அவைகள் சுற்றுச்சூழலை பாழ் படுத்துகிறது. கூடுமான வரை நான் பூமி மாசு படுவதை தள்ளிப் போடப் பார்க்கிறேன்." என்று தீர்க்கதரிசியாக கூறினார்...
மென்மேலும் பல சாதனை சிகரங்களை எட்ட வாழ்த்திவிட்டு...
ஒரு மாபெரும் மனிதரை சந்தித்த திருப்தியோடு அவரிடமிருந்து விடைப்பெற்றேன்.
"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் 
உழந்தும் உழவே தலை."
குறள் விளக்கம்:-
பல வகையான தொழில்கள் இவ்வுலகில் இருந்தாலும், ஏர்த்தொழிலின் பின்னேதான் அனைத்துமே சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே உலகில் உழவுத் தொழிலே சிறந்தது.
விவசாயம் குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு நாகரத்தினத்தை தொடர்பு கொள்ளலாம்.
தமிழிலேயே பதிலளிப்பார்...
மொபைல் : 094404-24463.
மாண்புமிகு...
குடிவாடா நாகரத்தினம்...
நம் நாட்டின் நவ ரத்தினம்...
இவரை பின்பற்றி நாமும் வாழ்ந்தால்...
இன்றே நம் வாழ்வில் ஒளி வீசும் தினம்... 

திங்கள், 5 அக்டோபர், 2015

Padaiveerar Paasarai - Lt Col CR Sundar

 
  

          We last met at Chepauk, Chennai, in September 2015 to conduct the most successful Veterans’ Protest for OROP in the State.
 
          While this is intended as a thank you note for your earnest enthusiasm and dedication to the cause of ESM it is also a call for greater sacrifices for the same purpose. Needless to say that we will find our next event as satisfying and uplifting as did the Chepauk meeting.
 
          As you are aware Maj Gen Satbir Singh, SM is the undisputed leader of veterans of armed forces who has been relentlessly leading the actions demanding OROP for the last nine years. A large number of veterans of Southern States wanted that Gen Satbir should be requested to guide us. Therefore I made bold to invite him.
 
          He has most kindly and graciously accepted our invitation and has given us a date, Sunday, 29 November 2015, when he will be with us.
 
          He will be accompanied by Gp Capt VK Gandhi, the General Secretary of IESM and Lt Col Balbir Singh Parmar, the Founder National President of Sainik Samaj Party.
 
          It is imperative that we should make the visit a resounding success. With that in mind we will soon be getting together to discuss and decide responsibilities.
 
          Meanwhile I request you to give the event the widest possible publicity to your friends in all the States of South India through email, whatsapp, Facebook, twitter, linkedin, blogs and every method possible including articles in the print media and appearances on radio and TV.
 
Please view the following videos.
 
SADA HAQQ! ITHE RAQQ!!
 
Regards,
Lt Col CR Sundar,
Sainik Samaj Party,
United Veterans of South India

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

கதை - Lt Col CR Sundar

 🍀 நெஞ்சை உருக்கிய கதை.
🍀  தலைப்பு:-  இன்னும் சில நாட்கள்.....
🍀  காலை நேரம்., அலுவலகத்திற்கு
கிளம்பியாக வேண்டும் நான். 
🍀 செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம்.
அய்யோ....
 
🍀  என்ன ஆயிற்று எனக்கு? 
🍀  நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?
🍀 ஒரு நிமிடம் யோசிக்கிறேன்....
🍀 நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.
🍀  காபி வேண்டுமே, என் மனைவி எங்கே?
மணி பத்தாகிவிட்டது
🍀 என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம்.
 
🍀 அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான்.
🍀 அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்...... 
🍀  என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள்.
பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள்.
என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.
🍀  நான் இறக்கவில்லை.,
இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன்.
🍀 ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை.
🍀  என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தெரியவில்லை.
🍀  அய்யோ என்ன செய்வேன் நான்?
எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்?
🍀 நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். "நான் இறந்துவிட்டேனா?" நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா?
🍀   என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால், அவனும் அழுது கொண்டிருக்கிறான்.
நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். அவனை பிரிந்து என்னால் இருக்கவே முடியாது. என் மனைவி, பாசமும், பரிவும் கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட அவள் அழுவாள்.
அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் பாசமே நிறைந்திருக்கும்.
இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.
🍀  அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான்.
🍀 ஆம்.. நான்தான் இறந்துவிட்டேனே.  அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப் பார்க்கிறேன்.
🍀  "ஓ கடவுளே! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள். நான் என் மனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்" என் மனைவி அறையில் நுழைந்தாள். "நீ அழகாக இருக்கிறாய் "
என்று நான் கத்தினேன். நான் அவளால் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை.
உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு சொல்லவே இல்லை.
🍀  "கடவுளே!" நான் கதறினேன். அழுதேன். தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு, என் குழந்தையை கட்டி அணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க , என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, இப்பொழுது நான் அழுதேன்!
🍀 திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். "தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றாள் மனைவி.
ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். ..
🍀  என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் கேட்க முடியும் இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி அணைத்து. " இந்த பிரபஞ்சத்திலேயே நீ மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி, உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்" என்றேன் முதன் முறையாக.
முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர், என் அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள்.  அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
🍀  இந்த இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி.
நண்பர்களே......
🍀 இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது. உங்களது ஈகோவை புறம் தள்ளி விட்டு உங்களது பாசத்தையும் நேசத்தையும் உங்களிடம் நெருக்கமானவர்களிடம் வெளிபடுத்துங்கள்.
🍀  ஏனெனில் உங்களுது பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!!! 
பிடித்திருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
 
LT Col CR Sundar

வெள்ளி, 2 அக்டோபர், 2015

OROP Protest - Col CR Sundar

தமிழ் நாட்டில் சம சேவை சமச்சீர் ஓய்வூதியம் OROP போராட்டம் 29 நவம்பர் 2015 அன்று படைவீரர் பாசறை என்ற பெயரில் வேங்கடமங்கலத்தில் நடை பெரும். விவரங்களுக்கு வீடியோ காண்க
https://youtu.be/s6oM79n3-ss

PADAIVEERAR PASARAI is the mega OROP Protest to take place in Vengadamangalam on 29 November 2015. Please watch the video.
https://youtu.be/gAsjRbXFYL0

Col CR Sundar