புதன், 21 அக்டோபர், 2015

ஜப்பானிய நீர் சிகிச்சை

தினமும் அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பல் துலக்குமுன் ஆறு குவளை (1.26 லிட்டர்) நீர் பருகுவதால், உடலின் உட்புற உறுப்புக்கள் தூய்மையாக்கப்பட்டு, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் மறைகின்றது. (இதை நம் முன்னோர்கள் 'உஷை பானம்'என்றழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)
தண்ணீரைக் குடித்தபிறகு, ஒரு மணி நேரத்திற்கு காபி, டீ போன்ற பானங்களையோ,பிஸ்கட், பழம் போன்ற தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக மிக அவசியமானது, முக்கியமானது. இதைக் கவனத்தில் கொண்டு நடைமுறைப் படுத்த வேண்டும்.
காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில், முதல் நாள் இரவுச் சாப்பாட்டை முடித்த பிறகு, படுக்கைக்குச் செல்லுமுன்பு, நரம்புமண்டலத்தைத் தூண்டக்கூடிய பானங்களையோ, பொருட்களையோ (மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள்) சாப்பிடக்கூடாது. இந்த நிபந்தனையும் முக்கியமானது. இரவே பல் துலக்கிக்கொள்வது நல்லது.
தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்குமானால், அதை முதல் நாள் இரவே கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி, பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.
இம்முறை ஆரம்பத்தில் ஒரு சில நாட்களுக்கு சற்று சிரமமாகத் தோன்றலாம். பின்னர் பழக்கமாகிவிடும்.
மருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர், பணச் செலவு ஆகிய எதுவுமே இல்லாமல், இம்முறைப்படி நீரைப் பருகுவதால், கீழ்க்கண்ட நோய்கள் குணமாகின்றன:-
* தலைவலி
* இரத்த அழுத்தம்
* சோகை
* கீல்வாதம்
* பொதுவான பக்கவாதம்
* ஊளைச்சதை
* மூட்டுவலி
* காதில் இரைச்சல்
* இருதயப் படபடப்பு
* மயக்கம்
* இருமல்
* ஆஸ்த்மா
* சளி
* காசநோய்
* மூளைக் காய்ச்சல்
* கல்லீரல் நோய்கள்
* சிறுநீரகக் கோளாறுகள்
* பித்தக் கோளாறுகள்
* வாயுக் கோளாறுகள்
* வயிற்றுப் பொருமல்
* இரத்தக் கடுப்பு
* மூலம்
* மலச்சிக்கல்
* உதிரப்போக்கு
* நீரழிவு
* கண் நோய்கள்
* கண் சிவப்பு
* ஒழுங்கில்லாத மாதவிடாய்
* வெள்ளை படுதல்
* கர்ப்பப்பை புற்றுநோய்
* மார்புப் புற்றுநோய்
* தொண்டை சம்பந்தமான நோய்கள்
இந்த முறை ஜப்பானில் பரவலாகக் கடைபிடிக்கப் படுகிறது.
சோதனைகள் மூலமாகவும், அனுபவபூர்வமாகவும் கீழ்க்கண்ட நோய்கள் குணமாக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
* மலச்சிக்கல் - ஒரே நாளில்
* வயிற்றில் பித்தம் மற்றும் வாயுப் பொருமல் - இரண்டு நாட்கள்
* சர்க்கரை வியாதி - ஏழு நாட்கள்
* இரத்த அழுத்தம் - நான்கு வாரங்கள்
* புற்று நோய் - ஆறு மாதங்கள்
* காசநோய் - மூன்று மாதங்கள்
நன்றி: தி ஹெல்த் சர்வீஸ்
மேற்கண்ட நீர் சிகிச்சையை முறையாக கடைபிடித்தால் பலன் நிச்சயம் உண்டு...
ஆரம்பத்தில் ஆறு குவளை நீர் பருக சிரமமாக இருக்கும்...
மேலும் உடலின் தேவைக்கு அதிகமாக கட்டாயமாக பருகுவதும் கூடாது...
ஆகவே, முதலில் கொஞ்சம் கொஞ்சமாக உடலின் தேவைக்கு தக்க, அளவோடு பருக ஆரம்பித்து...
பின்னர், உடலின் ஒத்துழைப்போட நீரின் அளவை அதிகரிக்க வேண்டும்.
செம்பு பாத்திரத்தில் இரவில் நீர் ஊற்றி வைத்து மறுநாள் பருகலாம்...
நீர் பருகும் போது அமர்ந்த நிலையில், சிறுக சிறுக பருக வேண்டும்.
சாப்பிடுவது போல சுவைத்து மெதுவாக விழுங்குதல் வேண்டும்.
மேலும், குளோரின் போன்ற ரசாயனங்கள் கலந்த நீரை பருக கூடாது.
நீரில் உள்ள கிருமிகளை அகற்ற...
மண்பாண்டம் பயன்படுத்தலாம்.
அல்லது
வாழை பழத்தோலையும் பயன்படுத்தலாம்...
குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
'குஸ்டவோ கேஸ்ட்ரோ' என்பவர் தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...
‘‘சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலைகளில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம் உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது.
இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம்...
மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன.
மேலும், தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறையும் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக்களை சுத்தப்படுத்தவும் வாழைப்பழத் தோல் உதவும்...
நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம்.
நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை.
இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள். உலகிலேயே வாழைப் பழ உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்தியாவுக்கு இது இனிப்பான செய்தி..!
தூய நீர் மட்டுமின்றி...
நல்லுணர்வுடன்...
சுத்தமான காற்று...
கலப்படமற்ற, சரியான உணவுகள்...
இவற்றின் இயற்கை தன்மையை முடிந்த அளவுக்கு மாற்றாமல், உணவு தயாரித்து...
சரியான அளவோடு, சரியாக உண்ணும் முறையில்... உண்டால்...
நலமுடன் வளமாக வாழலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக